search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"

    • ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியில் மயிலை ரயில் நிலையம் எதிரே உள்ள கூவம் ஆற்றில் ஒருவர் மது போதையில் இறங்கி தரையில் அமர்ந்து கொண்டு நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்.

    இதுபற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, கள்ளகுறிச்சி மாவட்டம் கொக்கரபாளையம் நாவலூரை சேர்ந்த அமோஷ் என்பது தெரியவந்தது. சென்னையில் மந்தைவெளி ரெயில் நிலைய நடைபாதையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.

    இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதால் இது போன்று நடந்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை முடிந்து பின்பு அந்த நபரை அனுப்பி வைத்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
    • விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் இருவரை மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், பகுதியில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதி மற்றும் போலீசார் அதே பகுதி எஸ்.பி.ஐ காலனியில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் "டிப்டாப்" உடையில் நின்று கொண்டு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இளம்வழுதியிடம் சென்று "சார் யாருக்காகவோ காத்து நிற்பதாக தெரிகிறது" என்றபடி நைசாக பேச்சுக் கொடுத்தார். மேலும் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் 2பேர் தங்கி உள்ளனர். அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கட்டணம் என்று கூறினார். உடனடியாக ஒ.கே என்று கூறிய சப்-இன்ஸ்பெக்டர் அழகிகளை நேரில் பார்த்த பின்னர் கட்டண தொகையை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

    இதையடுத்து வாடிக்கையாளர் கிடைத்து விட்டார் என்று நினைத்த வாலிபர் உடன் வருவது போலீஸ் என்று தெரியாமல் சப்- இன்ஸ்பெக்டர் இளம் வழுதியை அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்து சென்றார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த மற்ற போலீசார் வாலிபரை மடக்கி பிடித்தனர். அழகிகளை வைத்து விபசாரம் நடத்தி வருவது சரவணன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அழகிகள் இருவரையும் மீட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.

    • ஒடிசாவில் ஒரே குடும்பத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் பர்கர் பகுதியை சேர்ந்தவர் குருதேவ் பக்.இவரது மனைவி சிவாசிகிபக்.இந்த தம்பதிகளுக்கு சூட்டாமணி (வயது 15) என்ற மகனும்,ஸ்ரீவாணி (10) என்ற மகளும் இருந்தனர். நேற்று இவர்கள் 4 பேரும் வீட்டில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உறவினர் ஒருவருக்கும் குருதேவ் பக்குக்கும் வீடு கட்டுவது சம்பந்தமான நிலப்பிரச்சினை இருந்து வந்ததும் இதன் காரணமாக அவர் 4 பேரையும் கடப்பாரையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.
    • இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி ராதிகா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்தார். இதையடுத்து இவரது பிள்ளைகள் ராதிகாவின் பெற்றோரிடம் வளர்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் பணி செய்து வந்த ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார். அது முதல் இங்கேயே தனியாக வசித்து வருகிறார்.

    இவரது தந்தை கருப்பையாவிற்கு 2 மனைவிகள், முதல் மனைவியின் மகன் ரமேஷ். தற்போது இவரது தந்தை 2-வது மனைவி, 2 பிள்ளைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். இதனால் ரமேஷ் தனியாக வசித்து வந்தார். இதனால் தனியாக வசித்து வரும் ரமேஷ், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சில நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவார் என்று தெரிகிறது. இவர் 2 முறை சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ், இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அதில் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் ரமேஷ் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற கிராம மக்கள் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ராமச்ச ந்திரன் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் சென்று ரமேஷின் உடலை கைப்பற்றினர். அதில் ரமேஷின் மார்பு பகுதியிலும், தலையில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டனர்.

    மேலும், அவரின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவு வரையில் இரத்தம் சிந்தி இருந்தது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களையும், கடலூரில் இருந்து மோப்ப நாயினையும் வரவழைத்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியாக வசித்து வந்த ரமேஷினை முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தனரா? சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர்.
    • திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஹார்விப்பட்டி, பாலாஜி நகரை சேர்ந்த சரவணன் மனைவி மேனகா (வயது 38). இவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில், "நான் ஆதீஸ்வரன் என்பவரின் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். இந்த நிலையில் அவர்கள் "எங்களுக்கு படப்பாடி தெருவில் ஒரு வீடு உள்ளது. அதை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டனர். இதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

    இதனைத் தொடர்ந்து ஆதீஸ்வரன், மனைவி ராஜலட்சுமி மற்றும் வாசு, மணிராஜா உள்பட 5 பேர், போலி ஆவணம் மூலம் என்னிடம் ரூ. 24 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகும் அவர்கள் எனக்கு வீட்டை பத்திர பதிவு செய்து தர முன்வரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர்பாக கேட்டேன். அப்போது அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே மனைவி திட்டியதால் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). விவசாயக் கூலி. இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் சண்டை வந்ததால் கோபமடைந்த சீனுவாசன் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கிய நிலையில் அவரது வீட்டின் அருகே கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×